வெகுநாள் கழித்து முதல் நாள் முதல் ஷோ என்று போய் பார்த்த படம் தூங்காவனம். பொதுவாக 1 வாரத்திற்குள் போவோம் இல்லையேல் 2வது ஷோ 3வது ஷோ என்று போவோம். இந்த முறை படம் trailer கூட பார்க்காமல் தான் படம் பார்க்க சென்றேன் படம் செமையா இருந்துச்சு. நான் கூருவது என்னுடைய் கருத்து. பிடிச்சா படிங்க பிடிக்காட்டி ஸ்கிப் பண்ணிட்டு போயிகிட்டே இருங்க என்ன நான் சொல்லுறது :P
ஆரம்பமே அதிரடியா அராம்பம் ஆகுது. கமலஹாசன் சார் முதலிலே வந்துடுறார். படத்தோட மொத்த கதைய 4 வரில சொல்லனும்ன்னா. போலிஸ் போதை மருந்து கடத்துற கும்பல்கிட்ட இருந்து, ஒரு பை போதை பொடி உள்ள பையை எடுத்துடுறாங்க( போலிஸ் மாதிரி இல்லாம கொள்ளைகாரன் வேஷம் போட்டு) . அதை வாங்க அந்த ரவுடி கும்பல் போலிசோட பையனை கடத்தி வச்சிட்டு, பையை கொடுத்துட்டு பையனை கூடிட்டு போன்னு சொல்லுது. அந்த போலிஸ் எப்படி அந்த பையை கொடுக்குறாரு அப்புறம் அவர் பையனை எப்படியெல்லாம் போராடி கூட்டிட்டு போறாரு இதாங்க கதை. ரொம்ப முக்கியமான ஒன்னு படத்துல பாடலே இல்லைங்க அதான் மெயின். கடைசியா ஒரு பாட்டு படம் முடிஞ்ச அப்புறம் அது சூப்பர் :)
<<<<<<<<<<<<<<< கொஞ்சம் விளக்கமா கதைக்கு போகலாமா >>>>>>>>>>>>>>>
ஹீரோ நம்ம கமலஹாசன் சார், எடுத்ததும் அவரும், அவரோட நண்பரும் ரவுடி கும்பலை மெரட்டி அதுல உள்ள போதை மருந்து எடுத்துட்டு போறாங்க.
அப்போ கமலஹாசன் சார் வயித்துல ஒருத்தன் கத்தி வச்சி கீரிடுறான், அவர் அதோட அந்த படம் முடியிற வரை அதையும் ஒரு பாயிண்டா வச்சிருகாரு படத்துல. பணத்துக்காக அவர் போதை மருந்தை கடத்துற மாதிரி காட்டிருப்பாங்க. இந்த படத்துல அவருக்கு டிவோர்ஸ் ஆகிருது. அவர் பையனும் அவரும் தனி வீட்டுல இருக்குறாங்க, அவன் அவங்க அம்மா கூட வார கடைசில 2 நாள் இருக்கிறான். போதை மருந்து கடத்தின கும்பல் பையனை கடதிடுறாங்க. அப்பப்போ சின்ன சின்ன கமெடி எல்லாம் வருது, அழகா ரசிக்கிற மாதிரி. திரிஷா அந்த போதை மருந்து திருடு போன இடத்துக்கு வந்து சர்ச் பண்ணுறாங்க. அப்போ தான் அவங்களும் போலீஸ் அப்படின்னு தெரியுது. அதுவும் அவங்க கமல் சார் நல்ல போலீஸ் அதனால தான் நானும் போலீஸ் வேலைக்கு வந்தேன்னு படம் முழுக்க அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவாங்க. முக்கியமான வில்லன் பிரகாஷ் ராஜ் சார் (போதை மருந்து வில்லன்) , கிஷோர் சார் (போலீஸ் ல இருக்குற போதை மருந்து வில்லன்) கமல் சார் மனைவி ஆஷா சரத், அவங்க அப்பபோ பையனை எங்க? ஏன் பையன் இன்னும் வீட்டுக்கு போகலை, போன் பேசலை? . அவன் எங்க என்ன ஏதுன்னு கமல் சார் கிட்ட கேட்கும் போது அவர் அவன் வருவான் நீ போ என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பார்ப்பார். அப்போ ஒரு போன்கால் வரும் (உங்களுக்கு தெரியாததா பையன் காணாம போயிருக்கான் போன் வந்தா என்ன அர்த்தம் :P ) உங்கள் பையன் எங்க கைல பையை கொடுத்துட்டு பையனை கூட்டிவிட்டு போ என பிரகாஷ்ராஜ் சொல்லுவார். அப்போது அவரும் சரி என்று சொல்லிவிட்டு, பையை எடுத்துவிட்டு போவார். கமலுடைய தோழர் கிஷோருக்கு போன் பண்ணி அனைத்தையும் சொல்ல, அவர் அந்த பையை எடுக்க திரிஷாவை அனுப்புவார். திரிஷாக்கு ஏதும் தெரியாது, ஆனால் கமல் பின்னாலேயே போய் அவர் வைத்த இடத்திலிருந்து இவர் எடுத்து அது என்ன என்று பார்க்கும் போது போதை மருந்து என்று தெரிய வர, இது எதுக்கு இவ்ளோ இருக்கு என்ற கேள்வியை கிஷோரிடம் போனில் கேட்டு சண்டை போட்டுவிட்டு ஒளித்துவைத்து விடுவார். பையனை கூட்டிவிட்டு வரவதற்காக, ஒரு பாக்கெட் போதை மருந்தை அடையாளத்துக்கு எடுத்து கொண்டு போய் காட்டிவிட்டு பையனை அனுப்பு நான் பையை தருகிறேன் என்று சொல்ல. அவர் பையை கொடுத்து விட்டு பையனை கூட்டிவிட்டு போ என்று சொல்லுவார். படம் முழுக்க பப்புக்கு உள்ளேயே தான் நடக்கும். பப்பென்றால் இப்படிதான் இருக்கோமோ என்கிற மாதிரி எனக்கு ஒரு கேள்வி :P (ஏன்னா நானு முன்ன பின்ன பப்பை கண்ணால கூட பார்த்ததில்லைங்கோ நம்புங்க :P ) .பையை திரிஷா எடுத்து மறைத்து வைத்ததால் என்ன பண்ண என்று தெரியாமல். அதே போல மைதா மாவு வைத்து பிரகாஷ்ராஜிடம் கொடுக்கிறார். அதை கொஞ்சம் தாமதமாக கண்டு பிடிகிறார்கள். கமல் படத்தில் முத்தக்காட்சி இல்லையா என்று யாரும் கேட்க்க கூடாது. அதற்க்காக ஒரு பெண் அந்த படத்தில் இருந்தாள். முத்தத்திற்கு மட்டும் தான் :P. பையனை அவர் கூட்டி கொண்டு போகும் போது தான் அது மாவு என்று கண்டு பிடித்து. மறுபடியும் அவனை கமல் சாரிடம் அவரிடம் இருந்து பிரித்து வைகிறார்கள். படத்தில் அடுத்து என்ன அடுத்து என்ன என்பது போல விறுவிறுப்பாக போனது. அடிபட்ட கமலுக்கு காயம் ஆறும்முன்பே பையனை தேடும் வேலை வந்ததும் அந்த வலியுடன் எப்படியெல்லாம் போராடி பையனை கை பிடிக்கிறார் என்பது தான் கதை. ஒரு நாள் இரவு முழுவதும் பப்பில் நடக்கும் கதை இது. காலையில் பையனை ஒரு வழியாக அம்மா வீட்டில் கொண்டுபோய் வாசலில் விட்டு விட்டு மயக்கம் போட்டு உள்ளேயே விழுந்திருப்பார். அதை பார்த்த அவரது பையன் காரை அவனே ஓட்டி அருகில் உள்ள மருந்துவமனையில் அவரை சேர்த்து விட்டு அமர்ந்திருக்கும் போது, பப்பில் கமல் சந்தித்த பெண் அங்கு தான் நர்சாக பணிபுரிகிறாள். அவள் வந்து உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது என்று ஓரிரு வார்தைகள் ஆறுதலாய் பேசிவிட்டு போக. அடுத்து த்ரிஷா வந்து அதே போல சொல்லிவிட்டு போக. பையன் விவரமாய் அம்மாவுக்கு போன் செய்து நீ உடனே மருத்துவமனைக்கு வா என்று சொல்லுவான். அம்மாவோ அங்க உள்ளவங்க பார்த்துபாங்கடா நான் வரலை என்று சொன்னதும். பையன் கொஞ்சம் அழுத்தமாக, இங்க உள்ளவங்க நல்லா பார்த்துகிறதாலதாம்மா உன்னைய கூப்பிடுரேன்னு பையன் சொன்னதும் அம்மா திருதிருவென்று முளிப்பதோடு படம் முடிவடைகிறது :P .
ஆரம்பமே அதிரடியா அராம்பம் ஆகுது. கமலஹாசன் சார் முதலிலே வந்துடுறார். படத்தோட மொத்த கதைய 4 வரில சொல்லனும்ன்னா. போலிஸ் போதை மருந்து கடத்துற கும்பல்கிட்ட இருந்து, ஒரு பை போதை பொடி உள்ள பையை எடுத்துடுறாங்க( போலிஸ் மாதிரி இல்லாம கொள்ளைகாரன் வேஷம் போட்டு) . அதை வாங்க அந்த ரவுடி கும்பல் போலிசோட பையனை கடத்தி வச்சிட்டு, பையை கொடுத்துட்டு பையனை கூடிட்டு போன்னு சொல்லுது. அந்த போலிஸ் எப்படி அந்த பையை கொடுக்குறாரு அப்புறம் அவர் பையனை எப்படியெல்லாம் போராடி கூட்டிட்டு போறாரு இதாங்க கதை. ரொம்ப முக்கியமான ஒன்னு படத்துல பாடலே இல்லைங்க அதான் மெயின். கடைசியா ஒரு பாட்டு படம் முடிஞ்ச அப்புறம் அது சூப்பர் :)
<<<<<<<<<<<<<<< கொஞ்சம் விளக்கமா கதைக்கு போகலாமா >>>>>>>>>>>>>>>
ஹீரோ நம்ம கமலஹாசன் சார், எடுத்ததும் அவரும், அவரோட நண்பரும் ரவுடி கும்பலை மெரட்டி அதுல உள்ள போதை மருந்து எடுத்துட்டு போறாங்க.
அப்போ கமலஹாசன் சார் வயித்துல ஒருத்தன் கத்தி வச்சி கீரிடுறான், அவர் அதோட அந்த படம் முடியிற வரை அதையும் ஒரு பாயிண்டா வச்சிருகாரு படத்துல. பணத்துக்காக அவர் போதை மருந்தை கடத்துற மாதிரி காட்டிருப்பாங்க. இந்த படத்துல அவருக்கு டிவோர்ஸ் ஆகிருது. அவர் பையனும் அவரும் தனி வீட்டுல இருக்குறாங்க, அவன் அவங்க அம்மா கூட வார கடைசில 2 நாள் இருக்கிறான். போதை மருந்து கடத்தின கும்பல் பையனை கடதிடுறாங்க. அப்பப்போ சின்ன சின்ன கமெடி எல்லாம் வருது, அழகா ரசிக்கிற மாதிரி. திரிஷா அந்த போதை மருந்து திருடு போன இடத்துக்கு வந்து சர்ச் பண்ணுறாங்க. அப்போ தான் அவங்களும் போலீஸ் அப்படின்னு தெரியுது. அதுவும் அவங்க கமல் சார் நல்ல போலீஸ் அதனால தான் நானும் போலீஸ் வேலைக்கு வந்தேன்னு படம் முழுக்க அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவாங்க. முக்கியமான வில்லன் பிரகாஷ் ராஜ் சார் (போதை மருந்து வில்லன்) , கிஷோர் சார் (போலீஸ் ல இருக்குற போதை மருந்து வில்லன்) கமல் சார் மனைவி ஆஷா சரத், அவங்க அப்பபோ பையனை எங்க? ஏன் பையன் இன்னும் வீட்டுக்கு போகலை, போன் பேசலை? . அவன் எங்க என்ன ஏதுன்னு கமல் சார் கிட்ட கேட்கும் போது அவர் அவன் வருவான் நீ போ என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பார்ப்பார். அப்போ ஒரு போன்கால் வரும் (உங்களுக்கு தெரியாததா பையன் காணாம போயிருக்கான் போன் வந்தா என்ன அர்த்தம் :P ) உங்கள் பையன் எங்க கைல பையை கொடுத்துட்டு பையனை கூட்டிவிட்டு போ என பிரகாஷ்ராஜ் சொல்லுவார். அப்போது அவரும் சரி என்று சொல்லிவிட்டு, பையை எடுத்துவிட்டு போவார். கமலுடைய தோழர் கிஷோருக்கு போன் பண்ணி அனைத்தையும் சொல்ல, அவர் அந்த பையை எடுக்க திரிஷாவை அனுப்புவார். திரிஷாக்கு ஏதும் தெரியாது, ஆனால் கமல் பின்னாலேயே போய் அவர் வைத்த இடத்திலிருந்து இவர் எடுத்து அது என்ன என்று பார்க்கும் போது போதை மருந்து என்று தெரிய வர, இது எதுக்கு இவ்ளோ இருக்கு என்ற கேள்வியை கிஷோரிடம் போனில் கேட்டு சண்டை போட்டுவிட்டு ஒளித்துவைத்து விடுவார். பையனை கூட்டிவிட்டு வரவதற்காக, ஒரு பாக்கெட் போதை மருந்தை அடையாளத்துக்கு எடுத்து கொண்டு போய் காட்டிவிட்டு பையனை அனுப்பு நான் பையை தருகிறேன் என்று சொல்ல. அவர் பையை கொடுத்து விட்டு பையனை கூட்டிவிட்டு போ என்று சொல்லுவார். படம் முழுக்க பப்புக்கு உள்ளேயே தான் நடக்கும். பப்பென்றால் இப்படிதான் இருக்கோமோ என்கிற மாதிரி எனக்கு ஒரு கேள்வி :P (ஏன்னா நானு முன்ன பின்ன பப்பை கண்ணால கூட பார்த்ததில்லைங்கோ நம்புங்க :P ) .பையை திரிஷா எடுத்து மறைத்து வைத்ததால் என்ன பண்ண என்று தெரியாமல். அதே போல மைதா மாவு வைத்து பிரகாஷ்ராஜிடம் கொடுக்கிறார். அதை கொஞ்சம் தாமதமாக கண்டு பிடிகிறார்கள். கமல் படத்தில் முத்தக்காட்சி இல்லையா என்று யாரும் கேட்க்க கூடாது. அதற்க்காக ஒரு பெண் அந்த படத்தில் இருந்தாள். முத்தத்திற்கு மட்டும் தான் :P. பையனை அவர் கூட்டி கொண்டு போகும் போது தான் அது மாவு என்று கண்டு பிடித்து. மறுபடியும் அவனை கமல் சாரிடம் அவரிடம் இருந்து பிரித்து வைகிறார்கள். படத்தில் அடுத்து என்ன அடுத்து என்ன என்பது போல விறுவிறுப்பாக போனது. அடிபட்ட கமலுக்கு காயம் ஆறும்முன்பே பையனை தேடும் வேலை வந்ததும் அந்த வலியுடன் எப்படியெல்லாம் போராடி பையனை கை பிடிக்கிறார் என்பது தான் கதை. ஒரு நாள் இரவு முழுவதும் பப்பில் நடக்கும் கதை இது. காலையில் பையனை ஒரு வழியாக அம்மா வீட்டில் கொண்டுபோய் வாசலில் விட்டு விட்டு மயக்கம் போட்டு உள்ளேயே விழுந்திருப்பார். அதை பார்த்த அவரது பையன் காரை அவனே ஓட்டி அருகில் உள்ள மருந்துவமனையில் அவரை சேர்த்து விட்டு அமர்ந்திருக்கும் போது, பப்பில் கமல் சந்தித்த பெண் அங்கு தான் நர்சாக பணிபுரிகிறாள். அவள் வந்து உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது என்று ஓரிரு வார்தைகள் ஆறுதலாய் பேசிவிட்டு போக. அடுத்து த்ரிஷா வந்து அதே போல சொல்லிவிட்டு போக. பையன் விவரமாய் அம்மாவுக்கு போன் செய்து நீ உடனே மருத்துவமனைக்கு வா என்று சொல்லுவான். அம்மாவோ அங்க உள்ளவங்க பார்த்துபாங்கடா நான் வரலை என்று சொன்னதும். பையன் கொஞ்சம் அழுத்தமாக, இங்க உள்ளவங்க நல்லா பார்த்துகிறதாலதாம்மா உன்னைய கூப்பிடுரேன்னு பையன் சொன்னதும் அம்மா திருதிருவென்று முளிப்பதோடு படம் முடிவடைகிறது :P .





