Monday, October 28, 2013

ராஜா ராணி (Sema dialogues )


படத்தில் உள்ள பெயர்கள்:
  1. ஆர்யா    - ஜான் 
  2. நாசரியா   -  கீர்த்தனா 
  3. நயன்தார - ரெஜினா 
  4. ஜெய்        - சூர்யா 
  5. சந்தானம்  - சாரதி 
  6. சத்தியராஜ் - நயன்தாரவின் அப்பா 

  • நாசரியா : பிரதர் இப்படியே ஏன் என் பின்னாடி சுத்திட்டு இருக்குறீங்க ...........
  • ஆர்யா   : பிரதர்ன்னு சொல்லாதிங்க நைட் எல்லாம் தூக்கமே வரமாடிக்கி ........ 
  • நாசரியா : உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும்           brother.....என்னைக்குமே பொண்ணுங்கதான் பசங்களை தேடி போகணும் ...........பசங்க பொண்ணுங்களை தேடி வர கூடாது......

  • உனக்கு ஊருல எவளாச்சும் தேன்மொழி, கனி மொழின்னு கிடைப்பா.... தேடி தேடி அலஞ்சு லவ் பண்ணு நான் உனக்கு செட்டே ஆக மாட்டேன்....
  • எல்லா நைட்டும்... எனக்காக யாரு இருக்காங்கன்னு நினைச்சாலே பாதி தூக்கம் கெட்டு  போய்டும்...... இப்போ தான் எனக்கு புருஷன் நீ இருக்கல்ல
  • என்னங்க எனக்கு எங்க அப்பாவை பார்த்துலாம் பயம் இல்லைங்க ...I love youங்க 
  • நம்ம life ல ரொம்ப புடிச்சவங்க நம்மளை விட்டு போன நாமளும் போனும்னு ஒன்னும் இல்லை என்னைக்காச்சும் ஒரு நாள் நமக்கு புடிச்ச மாதிரி நம்ம life மாறும்.....எனக்கு மாறிடுச்சு 
  • எல்லாரும் love பண்ணின பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு தெரியலை ஆனா கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணை கண்டிப்பா love பண்ணலாம். 
  • ஒன்னு உன் சந்தோஷத்துக்காக வாழனும் இல்லை அவங்க சந்தோஷத்துக்காகவாது வாழனும்...உன் சந்தோஷம் தான் உன் கைல இல்லையேடா அப்புறம் ஏன் அவங்கள கஷ்டபடுத்துற sadist.
  • வாழ்கைல பாதி பேருக்கு புடிச்ச மாதிரி கல்யாணம் நடக்கிறது இல்லை...இருந்தாலும் வாழுறது இல்லையா....உனக்கு எப்போ இந்த life புடிக்குதோ அப்போ இருந்து lifeஅ start பண்ணு.
  • last ஆ ஒன்னு சொல்லுறேன் love க்கு அப்புறம் ஒருத்தன் குடிக்கிறான்னா அது love failure. அதுவும் கல்யாணத்துக்கு அப்புறமும் அவன் குடிக்கானா அவன் lifeஏ failure .
ஆர்யா birthday celebration : (ஆர்யா,2nd person,சந்தானம்)
  • ஆர்யா      : ஏன் வெட்டனும் .....(cake) வெட்டாமலே celebrate பண்ணலாமே மச்சான்......
  • 2nd person : cake அ  வெட்டாம எப்படி சார் சாப்ட முடியும் ....
  • சந்தானம்   : ஏன் சாப்டமுடியாது? ... கரண்டி எடுத்துட்டு வந்து சக்கரை பொங்கல் மாதிரி  வழிச்சு                     வாய்ல போட்டுக்கோடா ......
  • 2nd person : நல்ல ஐடியாவா இருக்கே......இந்தா எடுத்துட்டு வாரேன் ....... 
  • சந்தானம்   : டேய் நில்றா ........இவன் வேற ஒருத்தன்.....  :P 

சத்தியராஜ்,ஆரியா,சந்தானம் :
  • சத்தியராஜ் : ஏன் ஜான் என் பொண்ணு எப்பயாச்சும் உங்களுக்கு பீர் வாங்கி                                                     கொடுத்துருக்காளா 
  • ஆர்யா      : ஏன் uncle?........உங்க பொண்ணு பீர் அடிக்குமா ...
  • சந்தானம்   : ஏன் ஓட்கா அடிச்சா company கொடுக்க வசதியா இருக்குமோன்னு பாக்குறியா
  • சத்தியராஜ் : அது இல்ல சாரதி...... என் பொண்ணுக்கு என்கிட்ட எதாச்சும்                                                        காரியம் ஆகணும்னா beer வாங்கி கொடுத்தது தான் correct பண்ணுவா அதான்                            கேட்டேன்...  
  • சந்தானம்   : நீங்க ஒரு பீரோட நிப்பாடிருவீங்க ......... நம்மாளு அடிக்க ஆரம்பிச்சா ஒரு கேஸ்                       பீரோடல முடிப்பான்.....
நயன்தார,சத்தியராஜ் :
  • நயன்தார    : அப்பா ........
  • சத்தியராஜ் : நீ happy ஆ இருக்கீல?
  • நயன்தார   : எனக்கென்ப்பா சந்தோஷமாத்தான் இருக்கேன்........பாத்தல்ல 
  • சத்தியராஜ் : ஹ்ம்ம்ம்....
  • நயன்தார   : அப்பா ................. 
  • சத்தியராஜ் : நீ எனக்காக நடிக்கிற ஓகே....ஜான் எதுக்காக நடிக்கனும் .....

  • என்னைக்கு என் love அ சொன்னேனோ அப்போ தான் என் life ஏ start ஆச்சு .....என்னைக்கு உன் லவ் அ நீ சொல்லுறியோ அப்போதான் உன் life ஏ ஸ்டார்ட் ஆகும்பா .....சரக்கு எடுத்துகோபா .....
  • சார், நான் சரக்கடிச்சா என் போண்டாடிக்கி புடிக்காது .........
  • ஜான் இன்னைல இருந்து உன் lifeஎ ஸ்டார்ட் ஆகிருச்சு நீ போலாம்பா 

நயன்தார(ரெஜினா),ஆர்யா(ஜான்),ஜெய்(சூர்யா) : climax 

  • நயன்    : சூர்யா சாகலை..... பாஸ்போர்ட் இடத்துல மேல........
  • ஆர்யா: இருங்க நான் போய் பேசுறேன் ........

  • ஆர்யா : நீங்க தான சூர்யா  ....
  •  ஜெய்    : ஆமா நான் தான் ....
  • ஆர்யா : உங்களுக்கு ரெஜினா தெரியும்ல .......customer care ல வொர்க் பண்ணும் போது                            wrong நம்பர்ல ரெஜினாவை friend புடிச்சு லவ் பண்ணி .......அப்புறம் நீங்க US                              போயி..அங்க இருந்து suicide பண்ணிகிட்டதா மிஸ்யூஸ்...... 
  • ஜெய்     : நீ யாரு?
  • ஆர்யா : ஜான் 
  • ஜெய்     : அவங்களுக்கு நீ யாரு சார் ?
  • ஆர்யா : husband ....
  • ஜெய்     : எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சார் ... ரெஜினா பார்த்ததும்.. ஹாய் ரெஜினா கல்யாணம்                 பண்ணிக்கலாமா ....அப்படின்னு கேக்க சொல்லுறீங்களா .....உங்ககிட்ட                                       சொல்லுறதுக்கு என்ன சார் ...எங்க அப்பா என்ன அடிச்சு தான் ஊருக்கு அனுப்சாரு                  பயந்துட்டே தான் போனேன் ....ஐயையோ லவ் போச்சே....life போச்சேன்னு ...எல்லா                 லவ் failure பின்னாடியும் ஒரு நல்ல life இருக்கும் சார்...நல்ல life தான் இருக்கு ..                         ஒத்துக்குறேன் மிஸ்ஸிங் தான் என்ன பண்ணர்து .... எனக்கு நல்ல தெரியும்                                     அவங்களால என்னை மறக்க முடியாதுன்னு ....அதனால தான் என் friend அ - விட்டே               நான் செத்துட்டேன்னு சொல்ல சொன்னேன்... எல்லாரும் love பண்ணின பொண்ண                     கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு தெரியலை ஆனா கல்யாணம் பண்ணிகிட்ட                         பொண்ண கண்டிப்பா love பண்ணலாம் ......
  • ஆர்யா : சார் நான் வேணும்னா உங்க பொண்டாட்டிகிட்ட பேசி பார்க்கட்டுமா 
  • ஜெய்     : போடா ......




வாழ்க்கை ஒரு சாக்கடை

வாழ்க்கை எனக்கு நிறைய பாடம் கற்று தந்திருக்கிறது .......
இன்னும் கற்றுக்கொண்டும் இருக்கிறேன்.....
சில விஷயங்கள் இன்னும் எனக்கு முழுமையாக புலப்படவில்லை....
சில பாடங்கள் நியாயமாகவும்.....
சிலவை அநியாயமாகவும் இருக்கிறது...
சில பாடம் இப்படி தான் இருக்குமா என்று ஆராய்ந்து பார்த்தால்....
இல்லை.....இல்லை இப்படி மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று

இப்போது தான் புலப்படுகிறது....
இப்படி அவரவருக்கு தகுந்தாற்போல் சட்டத்தையும்,நியாயத்தையும்
மாற்றி அமைத்தால் பூமி எப்படி தாங்கும்....
இல்லையேல் நாம் தான் எப்படி தாங்குவோம்....
இதை நாம் திருப்பி கேட்டால் திமிரு பிடித்தவர் என்றெல்லாம் பட்டம் கொடுப்பார்கள்...

இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு
இப்படியே  மனிதர்கள் வாழ முடியும்...எப்படி தான் வாழ போகிறார்களோ...
இதனால் தான் (சாதி,மதம்,இனம்,வீட்டு) கலவரம், சண்டை என்றெல்லாம் உருவாகிறது..

இதற்க்கு என்றுமே தீர்வு கிடையாதா என்றால் கிடையாது........அவர்களாக புரிந்து கொள்ளும்வரை :-/ 
இப்படிபட்ட நிலையில் யாரேனும் நமக்கு உதவியாக இருந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் .....
இல்லையென்றால் நாம் அனாதையாக இருக்கோம் என்கிற உண்மை புலப்பட்டுவிடும் .......

                               கலிகாலம் முற்றிவிட்டது இனி கடவுளுக்கு தான் வெளிச்சம்


                                               

Tuesday, October 22, 2013

காதல் பிரச்சனை

ஆண்களுக்கு மட்டும் தான் காதலின் வலி தெரியுமா என்ன?
பெண்களுக்கு அதை விட தெரியும் .......

என்னமோ கவிதையாக எழுதி தள்ளுகிறார்கள் ...
எங்களுக்கு தான் காதலின் வலி அதிகம் ....
நாங்கள் தான் தனியாக தவிக்கிறோம் என்றெல்லாம் எழுதுகிறார்கள்...

ஒரு காதலன் எழுதும் கவிதையில் அதிகமாக பயன்படுத்தும் வரி....
நீ இல்லையென்றால் செத்து விடுவேன்......
தினமும் தவிக்கிறேன் அழுகிறேன் அன்பே .....
இறுதியாக, தினம் தினம் சாகிறேன் சீக்கிரம் வந்துவிடு.......
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே சொல்லிட்டு இருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை..

எல்லா பெண்களுக்குள்ளும் காதல் இருக்கிறது!
ஆண்கள் வைக்கும் பாசத்தின் அளவிற்கு பெண்களும் பாசம் வைகிறார்கள் ....
என்ன உங்களால் வெளிப்படையாக எழுத முடியும் ....
பெண்களால் எழுத முடியாது....

ஆண்களை பொறுத்தவரை வீட்டிற்கு தெரிந்தாலும் பிரச்சனை இல்லை...
கட்டிக்க போற பொண்ணுக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை இல்லை.....
காதலி பற்றி பெருமையான வார்த்தைகளும்,கவிதைகளும்
நடந்த கதைகளும்  மனைவியிடம் சொல்லுவார்கள் ......
மனைவியால் தான் எதுவும் சொல்ல முடியாதே....
(சந்தேக கேள்வி எழும்....அப்பெண்ணின் செயல்களை பொருத்து (தொடர்பில் இருந்தால்) )
மனைவி மனதில்படும் வேதனை பற்றி கணவனுகென்ன கவலை...
ஆண்களின் காதல் உலகத்துக்கே தெரிஞ்சாலும் பிரச்சனையே இல்லை....( ஒரு(இரு)தலை காதல் )
மொத்தத்தில் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை ................. (full open type)


பாவம் பெண்கள்....எத்தனை இடங்களில் தங்கள் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் .......
1. வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை....
2. கணவன் வீட்டிற்கு தெரிஞ்சால் பிரச்சனை.... (பழைய,பள்ளி,கல்லூரி காதல்)
3.கணவனுக்கு தெரிஞ்சால் பிரச்சனை...... (சந்தேக கேள்வி எழும்...தொடர்பில் இல்லை என்றாலும்)
4. மொத்தத்தில் வாழ்க்கையே சீரழிந்து விடும்..............

மொத்தத்தில் ஆண்களால் மன பாரத்தை கவிதை,கதையின் மூலம் வெளியில் கொட்டி விட முடியும்.....
பெண்கள் மனதினுள் போட்டு புதைத்து வைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் அவதிபடுவார்கள் ....
மண்ணிற்குள் புதையும் போது தான் அவள் கவலையும் சேர்ந்தே புதையும் .... :(

இதில் சில ஆண்கள் வித்தியாசம் மனைவியின் பழைய காதல் வாழ்க்கை பற்றி தெரிந்திருந்தாலும் அது எப்படி இருந்தால் என்ன?.. என் மனைவி பற்றி எனக்கு தெரியும்,என்று அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு கேள்வியும்  மனைவியிடம் கேட்பது இல்லை.... யாரேனும் அது சம்பந்தமா கேள்விகள் கேட்டால் கூட உங்க வேலைய நீங்க பார்த்துட்டு போங்க.  என் பொண்டாட்டி பற்றி எனக்கு தெரியும், என்று சொல்லும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......... அப்படிபட்ட ஆண்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.


"எல்லாவற்றிற்கும் மேலாக உலகில் மிகச் சிறந்த காதல் கணவன் மனைவி காதலே". 


நேற்று ஒரு படம் பார்த்தேன் சில கேள்விகள் மனதில் தோன்றியது எழுத வேண்டும் என்று நினைத்தேன் .............. என் மனதில் தோன்றிய குப்பைகளை கொட்டிவிட்டேன் நண்பர்களே.  :)

                                       
                                              

Wednesday, August 21, 2013

காலை பொழுது

என் நினைவில் நீ இருக்கிறாய்!
உன் நினைவில் நான் இருக்கிறேனா.......
    ~~~என்கிற கேள்வியோடு விடிகிறது இன்றைய காலை பொழுது?


  

Wednesday, July 31, 2013

ஆண்டவன் ஆட்டம்


எல்லார் கண்ணுக்கும் தெரியற மாதிரி
முகத்தைப் படைச்ச கடவுள்,,
யார் கண்ணுக்கும் தெரியாத மாதிரி
மனச படைச்சுட்டான்.....
.
.
.
இதனால என்ன ஆச்சுன்னா,,,
.
.
.
.
.
.
பல நாதாரிப் பயலுகள நல்லவனாகவும்

பல நல்லவங்கள நாதாரிப்பயலாகவும் 

நினைக்குது இந்த மானங்கெட்ட சமுதாயம்...


ஆணவத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிமையாக இருப்பதை காட்டிலும் ஒருவரின் அன்பிற்கு அடிமையாக இருந்தால் இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் அந்த உறவுகளை பிரிக்க முடியாது.....


என்னை பார்க்கும் போது பொறமையாக உள்ளது 
உன் மீது மட்டும் ஏன் அளவுகடந்த அன்பா இருகிறேன் என்று.......!!!

My sweet bujju <3 <3 <3





Wednesday, July 24, 2013

கிணறும் இத்து போன கயிறும்

பிழைப்பு தேடி ஒரு பெரிய குடும்பம் ஊரு விட்டு ஊரு சென்று கொண்டிருந்தனர்.

     ரொம்ப தூரம் நடந்தே வந்ததால்..... ஓய்வு எடுக்க ஒரு இடம் தேடினர்.  எல்லாரும் கொண்டு வந்த தண்ணீர்  தீர்ந்து விட்டது.  பயங்கர தாகம் என்ன செய்யவதென்று யாருக்கும் புரியவில்லை.  இரவு நேரம் நெருங்கி கொண்டிருந்தது.

     அப்போது அங்கே தூரத்தில் ஒரு இடிந்த வீடு இருப்பதை கண்டனர் இரவு நேரம் நெருங்கி விட்டது. அங்கே தங்கிவிட்டு நாளை காலை செல்லலாம் என முடிவு எடுத்தனர்.

     அருகில் வந்த பின்பு தான் இங்கு ஒரு கிணறு இருப்பதையும் கண்டனர். கிணற்றின் மேலே இது நல்ல தண்ணீர் கிணறு என்று அட்டையில் எழுதி இருந்ததை கண்டனர். எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.  கிணற்றில் தண்ணீர் நிறைய இருந்தது ஆனால் அதில் தண்ணீர் இறைப்பதர்க்கான பாத்திரம் எதுவும் இல்லை.

     அவர்கள் பிழைப்பு தேடி போவதால் சில சமையல் பொருட்கள் எல்லாம் எடுத்து தான் வந்திருந்தார்கள். தண்ணீர் இல்லாமல் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தண்ணீரை கண்டதும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போய்விட்டது.

     குழந்தைகள், முதியோர் என பெரிய குடும்பம் இவர்களது குடும்பம். எல்லோரும் பசியுடனும் தாகத்துடனும் இருந்தனர். 

     அங்கே ஒரு இத்து போன கயிறு ஒன்று கிடந்தது, மேலும் அந்த இடிந்த வீட்டிற்க்குள் ஏதேனும் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அங்கே வாளி ஒன்றும் இருந்தது.......

     அந்த குடும்பத்தில் உள்ள ஒருவன் இதை வைத்து நான் தண்ணீர் இறைத்து தருகிறேன் என்று சொன்னான். எல்லோரும் எனக்கு எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள்.

     தண்ணீர் இறைக்கும் முன்னே அவன் தன் குடும்பத்திடம் ஒன்று கூறினான்.  "இந்த கயிர் வைத்து முழு வாளி தண்ணீரும் இறைக்க முடியாது அப்படி இறைத்தால் ..... கயிர் அறுந்து வாளியும் கிணற்றினுள்ளே போய்விடும்.  அதனால், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் இறைத்து தருகிறேன் எல்லோரும் பகிர்ந்து குடித்து கொள்ளவும் என்று கூறினான்".  எல்லோரும் எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்தனர்.
 
     "அவனும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் இறைத்து கொடுத்தான்....எல்லோருடைய தாகமும் தீர்ந்தது".

      ஆணால் அவன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை......கேட்டால், நீங்கள் எல்லாரும் குடிங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டான்.

     பெண்கள் தண்ணீர் கிடைத்து விட்டது கஞ்சியாவது காய்ச்சிடலாம் என முடிவு எடுத்தனர்.

     ஆண்களில் சிலர் நல்ல தண்ணீர் கிடைத்து விட்டது குளித்து விடலாம் என நினைத்தனர் (இனி எப்போ, எங்கே தண்ணீர் கிடைக்குமோ  என நினைத்தனர்).

     "யாரும் அடுத்து தண்ணீர் இறைக்க முன் வரவில்லை இவன் இறைப்பதிலே எல்லோரும் உபயோகபடித்தி கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் கயிறின் நிலை கொஞ்சம் மோசமாக தான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் கயிறு அறுந்து வாளி கிணற்றினுள் விழுந்து விட்டது."

     "நல்ல வேலையாக கடைசியில் அவனும் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டான்".

இந்த கதை நம் வாழ்கைக்கும் பொருந்தும்:  பணமும் தண்ணீரும் ஒன்று தான்.

     அவசர பட்டு வாளி நிறைய தண்ணீர் இறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரு வாய் தண்ணீர் கூட கிடைக்காமல் போயிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றில் தண்ணீர் இறைத்ததால், தண்ணீரும் கிடைத்தது தாகமும் தீர்ந்தது.  பணமும் அப்படிதான் எல்லோரும் நிறைய செலவு செய்து விட்டு ஒருவர் மட்டும் மிச்சம் செய்வதால் ஒன்றும் செய்து விட முடியாது. எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் நிதானமாகவே செலவு செய்ய வேண்டும் அப்போது தான் "கிணற்றில் இருந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப தண்ணீர் எடுப்பது போல".... பணத்தையும் அளவுக்கு மீறி செலவு செய்யாமல்......சேர்த்து வைத்து அவ்வப்போது எடுத்துக் கொண்டால் எல்லோரும் பயன் பெற முடியும்.

              
                       


Monday, July 8, 2013

சுக்குக் காபி' சூர்யா

ரியல் சிங்கம்... 'சுக்குக் காபி' சூர்யா!

சென்னை, மெரினா பீச்சில், இன்று (7/7/13) மாலை ஒரு கொடுமையான சம்பவம். எத்தனை முறை படித்துப் படித்துச் சொன்னாலும்... படிக்கும் பிள்ளைகளின் காதுகளில் மட்டும் ஏறுவதே இல்லை என்பதற்கு உதாரணமாக... கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் (நான்கு பேர் என்றும் சொல்கிறார்கள்), கடலில் இறங்கி தீவிரமாக குளித்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்தவர்கள், உற்சாக மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.

திடீரென்று காப்பாத்துங்க காப்பத்துங்க என்கிற குரல் கேட்க, அதையும் குஷியில் தமாஷாக கூச்சலிடுகின்றனர் என்றே புரிந்து கொண்டது கரையிலிருந்த கூட்டம். ஆனால், அங்கே சுக்கு காபி விற்றுக் கொண்டிருந்த சிறுவன் மட்டும் எதையோ உணர்ந்தவனாக சட்டென்று தன் கையிலிருந்த காபி கேனை கரையில் வைத்துவிட்டு, சிங்கமென சீறி தண்ணீருக்குள் பாய்ந்தான், அப்போதுதான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தது கரையிலிருந்த கூட்டம்.

தண்ணீரில் தத்தளித்தவர்கள் மூன்று பேருமே கிட்டத்தட்ட மயக்கமாகிவிட்ட நிலையில், ஒருவரை மட்டும் போராடி கரைக்கு இழுத்து வந்தான் அந்தச் சிறுவன். மீதமிருந்தவர்களை, கரையிலிருந்த படகைத் தள்ளிக் கொண்டு போய் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர் படகோட்டிகள் சிலர்.

சிறுவனால் காப்பற்றவர் உடனடியாக சுயநினைவு பெற்றுவிட, மற்ற இருவரும் சுயநினைவற்ற நிலையில், மூச்சுபேச்சற்ற நிலையில் போலீஸின் துணையோடு ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவர், உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தகவல். நான்காவதாக ஒருவர் தானே தப்பி கரையேறி வேகமாக அங்கிருந்து சென்றவிட்டதாகவும் தகவல்.

தன் உயிரை துச்சமென மதித்து, ஓர் உயிரைக் காப்பாற்றிய அந்த சுக்கு காபி சிறுவனின் பெயர் எஸ்.சூர்யா. லைட்ஹவுஸ் பகுதியிலிருக்கும் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இப்படி காபி விற்பது வழக்கமாம். அவனுடைய துணிச்சலான செயலைக் கண்ட பலரும் அவனைப் பாராட்டித் தள்ளினர். அவன் கொண்டு வந்திருந்த சுக்கு காபியும் மளமளவென விற்றுத் தீர்ந்தது.

பின்குறிப்பு:

சூர்யா கடலில் புகுந்து காப்பாற்ற முயற்சித்த வேளையில் கரையில் நின்றிருந்த அத்தனை பேரின் வாயிலிருந்தும் வந்த வார்த்தைகள்... வெங்கடாஜலபதியே... ஏசப்பா... யா அல்லாவே...! ஆம், அத்தனை பேரும் அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் தங்கள் தெய்வங்களை வேண்டியபடியே நின்றிருந்த காட்சி... நெகிழ வைப்பதாக இருந்தது!

                                    

Sunday, July 7, 2013

ரொம்ப கஷ்டம்

ஒரு நல்ல பொண்ணோட friendship கிடைக்கிறது ரொம்ப கஷ்டம், அப்படி கிடைச்ச பொண்ணோட relationship maintain பண்ணுறது அதை விட ரொம்ப கஷ்டம், அப்படி maintain பண்ணனும்னா பொண்ணு நம்மள விட்டு விலகனும், அப்படி விலகனும்ன்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய கஷ்டம்........ ( இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.)

                                     

Tuesday, July 2, 2013

பிரித்து பார்ப்பது நீயா நானா?

"பிரித்து பார்ப்பது நீயா நானா?" புரியவில்லை எனக்கு .......

       பெங்கலூரில் இருக்கும் என் அக்காவிடம் பேசி வெகுநாட்கள் ஆகிறது என்று அவளுக்கு போன் பண்ணினேன்.

என்னடி எப்படி இருக்க நல்லா இருக்கியா என்று கேட்டேன் ...

அவளுடைய பதில் உம் என்று வந்தது......

என்னவோ ஏதோ என பதறி போனேன் நான்....

     என்ன ஆச்சுடி  என்று கேட்டேன்.....ஒன்றும் இல்லை என்று சொன்னவள்.....மெதுவா தயங்கி தயங்கி சொல்ல வந்தாள்....

     ஊரில் இருந்து அவள் அம்மா அப்பா அவளை பார்க்க வருவதாகவும் சிறிது நாள் தங்கிவிட்டு போவதாகவும் வருத்தம் கலந்த சந்தோஷத்தோடு சொன்னால்.....

     இதை ஏன் இப்படி சோகமா சொல்லி தொலைக்க.....சந்தோஷப்பட வேண்டியதுதான என்று சொன்னேன்.....

என் கணவருக்கும் சந்தோஷம் என்றால் தான்....நானும் சந்தோஷமாக இருப்பேன் என்றாள் .....

ஏன் உன் கணவருக்கு ஏன் சந்தோஷம் இல்லை என்று கேட்டேன்......

     (அவள் கணவர் தற்போது ஒரு மாத காலம் விடுமுறை எடுத்து அவர் அம்மா அப்பா அண்ணண் என குடும்பத்தோடு சிறிது நேரம் கழிக்கலாம் என முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்க்கான விடுப்பும் எடுத்துவிட்டார் என்றும்.  அப்போது என் அக்காவின் அம்மா,அப்பா குடும்பத்துடன் ஐந்து நாட்கள் வெளியில் சுற்றலாம் என்றும்.... அவர்கள் இருவரும் பேசி முடிவு எடுத்து.   இடத்தையும் குறித்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பு தான் என்னிடம் சொல்லிருந்தாள்.)

     அவருக்கு அதில் ஒன்றும் வருத்தமெல்லாம் இல்லை. ஏனோ எனக்கு அப்படி தோன்றுகிறது என்று சொன்னாள்......

     அப்புறம் என்ன, எல்லாம் நல்லாதனே போகுது.  இதுக்கு ஏன் எதையோ பறிகொடுத்தவ மாதிரி இப்படி இருக்கன்னு கேட்டேன்.......இல்லைனா அவர் எதுவும் சொன்னாரா என்று கேட்டேன்......

     அம்மா வீட்டில் இருக்கும் போது அங்கு சில பொருட்கள் வாங்கவேண்டும் என்று சொன்னேன்....அதற்க்கு அவர் நீ போய் வாங்கு, அங்க வந்து நான் என்ன செய்யபோறேன் என்று சொன்னார்.....

ஆமாம், அவர் சொல்லுவதும் சரி தானே என்று நான் சொன்னேன்.

     அதெல்லாம் சரிதான் நான் அதை ஒன்னும் சொல்லலை.....அதனால்,  அவர் நான் அம்மா வீட்டுக்குப் போறேன்.......நீ பொருள் எல்லாம் வாங்கிகொண்டு வா என்று சொல்லிவிட்டார்.

(அவள் அம்மா வீட்டிலிருந்து அவளுடைய அத்தை வீடு வரை பஸ்ஸில் செல்ல குறைந்தது ஒன்னரை மணி நேரமாவது ஆகும்.)

            நீங்களும் இருந்தால் நன்றாக இருக்குமேன்னு சொன்னேன்.....அவரோ, நான் அங்க இருந்தால் நாலு சாதிசனத்தை பார்த்துப்பேன் என்று சொல்லிவிட்டார் (சொந்தக்காரங்க வீட்டுக்கு போகணும்னா நானும்தான் போகணும்ன்னு ஆசைபடுவேன்...அங்க அவர் தனியா சந்திக்க ஒரு சிலர் மட்டும் தான் இருக்காங்க கொறஞ்சது மூன்று பேருதான் அவர்கள் மூனு பேரையும் சந்திக்க கிட்டத்தட்ட 4மணி நேரம் தான் தேவைப்படும்ன்னு அவங்களே சொல்லிருக்காங்க).  நானும் கொஞ்ச நேரம் தான் ஆகும்.....நீங்க வேணும்னா என் அண்ணா கூட இல்லாட்டி என் அப்பா கூட.....அப்படின்னு சொல்லும் போதே அதெல்லாம் வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டார்...என் கண்ணில் கண்ணீர் மட்டுமே வந்தது, பதில் பேச தெரியவில்லை...நானும் இதுக்கு மேல இதை பற்றி பேச வேண்டாம் என்று நிறுத்திவிட்டேன்...எங்கள் திருமணம் முடிந்ததிலிருந்து இன்று வரை என் அம்மா அப்பாவுடன் என் கணவரும் சேர்ந்து வெகுநேரம் பேசியதோ, அவர்களுடன் நேரம் செலவழித்ததோ கிடையாது. (விருந்துக்கு போனது கூட எல்லாம் என் கணவர் வீட்டின் சொந்தங்களுக்கு மட்டும் தான் போனோம்....நாட்கள் குறைவாக இருந்ததால்....சிலர் வீட்டிற்க்கு நான் கேட்டதற்க்கு கூட நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார்...அப்போது அவர் அங்கு வேலை பார்த்ததால் நானும் ஒன்றும் சொல்லவில்லை விட்டுவிட்டேன்)  இன்று வரை அவருக்கு அப்படி ஒரு எண்ணமும் கிடையாது....இனி அப்படி நினைப்பார என்று கூட எனக்கு தெரியவில்லை. அதற்க்கு காரணமும் எனக்கு தெரியவில்லை.....அப்படி,  நான் ஒருவேளை கொஞ்ச நேரம் என் அம்மா அப்பாவுடன் இருக்கணும் என்று சொன்னால் அவர் கூறும் பதில் "நீ வேனா இரு....நான் போறேன்...நீ எப்போ வரியோ வா" இதைத் தான் சொல்லுவார்..... இப்படி சொன்னா அம்மாவீட்டில எப்படி என் கணவர் விட்டுட்டு இருக்க மனம் வரும்....அதனால் நான் ஏதும் சொல்லுவது கூட இல்லை.   நான் என் அத்தை மாமாவை "என்னை பெற்றெடுக்காத தாய் தந்தையாக" தான் நான் பார்க்கிறேன்...... அது போலதான் என் கணவரும் நினைப்பார் என்று நான் நினைத்தேன்.  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல அவருடைய சில நடவடிக்கைகளை பார்த்து நான் தெரிந்து (கொண்டே இருக்கேன்) கொண்டேன்...... எனக்கும் சில ஆசைகள் இருக்கு.....அவர் என் அம்மா அப்பாவை வேறு யாரோ என்று பார்க்காமல் இருந்தாலே போதும் என்று தான்.....அவர்களுடன் வெளியில் செல்ல வேண்டும். எங்க போகலாம் சொல்லுங்கன்னு சொன்னா ....நீயே எங்க போகணும்ன்னு சொல்லு நாம போகலாம் என்று சொல்கிறார்.....( என் கணவரை என்னால் குறை சொல்லவே முடியாது ஒரு கணவராக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ எல்லாமே செய்கிறார்....அப்படி இருக்கும்போது என் கணவரிடம் நான் என்ன குறை சொல்ல என்று சொன்னால்)

          சரி ஆகிடும் அதெல்லாம் ஒன்னும் நினைக்காதே என்று நான் சொல்லிக்கொண்டே...அடுத்து ஒரு கேள்வி கேட்டேன்....சரி அதென்ன சில நடவடிக்கைய  பார்த்தன்னு கேட்டேன்.

      இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு என்னுடைய அம்மா அப்பா இங்க வாராங்க, என்னையும் பார்த்துட்டு கொஞ்ச நாள் இங்க இருந்து பக்கத்துல உள்ள  சில இடங்களையும் சுத்தி பார்த்துட்டு போகலாம்ன்னு.  அதுக்கு காரணமே நான் தான்.... எனக்கு ரொம்ப ஆசையா இருந்துது... என் அம்மா அப்பாவை இங்க கூப்பிடனும்ன்னு...... ஏன்னா, ஒருமாதம் விடுமுறை எடுத்து ஊருக்குன்னு போனா கூட அம்மா வீட்டுக்கு கொறஞ்சது ஐந்து நாளுக்கு மேல இருக்கிறது அபூர்வம்.....அவங்க இங்க வந்தாங்கன்னா அப்படியாவது என் கணவரும்.... அவர்களும் சேர்ந்து பேசுறது பழகுறதை பார்க்கனும்ன்னு எனக்கு ஒரு ஆசை ( என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவள் குரல் உள்ளே சென்றது....ம்ம்ம் அழுது கொண்டு இருந்தால்) அவங்க அம்மா, அப்பா, அண்ணா, குழந்தைங்கன்னு ரொம்ப ஆசையா அவங்கள பார்ப்பதை,பேசுறதை, அவங்களை வெளிய எங்கையாவது நல்ல இடங்களுக்கு கூட்டிட்டு போறதையும் அதிகம் விரும்புவாங்க, அதை பபற்றி என்கிட்ட நல்லா பேசுவாங்க....அது அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்......செலவை பற்றி எல்லாம் கவலை பட மாட்டங்க பல லட்சம் செலவான கூட பரவாயில்லைன்னு சொல்லுவாங்க.  ஆனா, இதுல கொஞ்சம் கூட என் அம்மா, அப்பா குடும்பத்தை பற்றி பேசியது கிடையாது.  அந்த அளவுக்கு என் அம்மா அப்பாவுடன்,  அவங்க பேசி பழகினதும் கிடையாதுன்னு (நானும் என் மனசை அப்படியே தேத்திப்பேன்) .... இப்போ என் அம்மா, அப்பா வந்தா என்னால விடுமுறை எடுக்க முடியாதுன்னு சொன்னாங்க....அது தெரியும் ஏன்னா இப்போதான் ஒருமாதம் விடுமுறை கேட்டுருக்கு....அப்படி இருக்கும் போது.....(இவங்க வந்தா விடுமுறை எடுக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்)..... நீயே கூடிட்டு போய் சுத்திகாட்டுன்னு சொன்னாங்க.  சரின்னு சொல்லிட்டேன்.
(என் வீட்ல இவங்களும் எல்லா இடங்களுக்கும் வரணும்ன்னு ஆசை... என் அம்மா,அப்பா பேசும் போதெல்லாம் மாப்பிள்ளையும் வரசொல்லு அதெல்லாம் வருவாங்க... அப்படின்னு அவங்களே சொல்லிபாங்க நான் இல்லை விடுமுறை கிடைக்காதுன்னு சொன்னா கூட அதுல்லாம் வருவாங்கய....நீ சும்மா இருன்னு,  என்னை சொல்லுவாங்க இதை எல்லாம் எப்படி நான் என் கணவரிடம் சொல்லுவேன்).....ஆனால், ஏனோ என் மனசுல இப்போ  என் அம்மா அப்பா ஏன் வாராங்கன்னு கூட யோசிக்க தோணுது...(என் கணவர் என் கிட்ட பேசுறதை எல்லாம் பார்க்கும் போது) .....நாங்க வேலை காரணமா ஊரு மாற்றி போகப்போரோம்ன்னு தான்...... நான் அம்மா அப்பாவை இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டதுக்கு காரணம்.  இல்லாட்டி நான் வர சொல்லிருக்கவே மாட்டேன்.

     சரி, அதையெல்லாம் நினைக்காத......வர்றவங்களை நல்லா பாத்துக்கோ உனக்கு மனசு மாறும்ன்னு சொன்னேன்.........

     ம்ம்ம்ம் பார்க்கலாம்...... என்று சொன்னால் அழுது கொண்டே......

     அப்போது அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் "மருமகளாய் வீட்டிருக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்ணிடம் .....அவளின் தாய் உன் அத்தை மாமாவை நீ அம்மா அப்பாவாகத் தான் நினைக்க வேண்டும்......எங்களை எப்படி கவனித்தாயோ அப்படிதான் அவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள்".  ஆனால், இதை போல ஏன் ஆண்களுக்கு கூறுவதில்லை..... இல்லைன்னா.....அவர்களாவது அப்படி புரிந்து கொள்ள கூடாதா "திருமணம் முடிந்த பின் எனக்கும் இனி ....இரண்டு தாய், தந்தை என்று".....ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இப்படி நினைத்துக் கொண்டால், எந்த குடும்பத்திலும் பிரிவும் வராது, பிரித்து பார்க்கும் எண்ணமும் வராதுன்னு என்னிடம் சொன்னால்.

அப்படியே என்னிடம் இன்னொன்றும் கேட்டால் ...." நான் என் அத்தை மாமாவை என் அம்மா அப்பாவாக தான் பார்க்கிறேன்.....அவர்களுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று எனக்கும் நிறைய கனவெல்லாம் இருக்கு ....... என் கணவரோ இப்படி, அவருடைய அம்மா அப்பா வேறு.... என் அம்மா அப்பா வேறு என்று பிரித்து பார்த்தால்........ எனக்கு தோனாதா,  நான் மட்டும் ஏன் இப்படி எல்லோரும் ஒண்ணு நினைக்கேன்....நானும் இனி எதிலும் ஈடுபாடு இல்லாமல் அம்மா,அப்பா வேறு அத்தை,மாமா வேறு என்று சிறு சிறு விஷங்களிலும் யோசிக்கலாமோன்னு கூட தோனுது..... அப்படி நினைக்க ஆரம்பித்தால் சின்ன சின்ன விஷங்களில் கூட சண்டை வரும் எதற்க்கும் ஒத்து போகாது....."எனக்கு ஒரே ஒரு ஆசை தான் என் அம்மா அப்பாவையும் என் கணவர் அவருடைய அம்மா அப்பாவை பார்ப்பது போல பார்க்க வேண்டும்." எனக்குன்னு வேறு ஆசை இல்லை....என் வீட்டில் என் அம்மா,அப்பா என் கணவரை தங்களுடைய மூத்த மகனாக தான் பார்க்கிறார்கள் அது ஏன் இவருக்கு புரியவில்லை...... இதை எல்லாம் நான் சொல்லி தான் புரியவைக்க வேண்டுமா?.....

     சரி அழாத எல்லாம் சரி ஆகிடும்.....அப்படின்னு நான் சொன்னேன்.....அவள் கேட்க வரும் கேள்வி  "குடும்பத்தை பிரித்துப் பார்ப்பது நீயா நானா?"..... இப்படி ஒரு கேள்வி அவள் மனதில் எழுவதற்கு என்ன காரணம்.....இன்னும் என்னிடம் சொல்லாமல் சில விஷயங்கள் வைத்திருக்கிறாளோ என்னவோ என்று என் மனதுக்குள் தோன ஆரம்பிக்கிறது.......

"மனைவி கணவனுடைய குடும்பத்தையும்....கணவன் மனைவியுடைய குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைக்க ஆரம்பித்துவிட்டால், இரு குடும்பத்துக்குள்ளும் சரி.... கணவன்,மனைவிகுள்ளும்  சரி..... குடும்பத்தை பிரித்து பார்க்கிறோம் என்கிற சண்டையும் மனக்குழப்பமும் வராது.

கடைசியில், அவளுடைய மனக்குழப்பத்தை எப்படி தீர்ப்பதுன்னு....எனக்கு வழி தெரியவில்லை... :(

இதுநாள் வரை, அவளை பாசத்துடன் வளர்த்து, ஆளாக்கி, எது கேட்டலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுத்து. எல்லாம் அவளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தும்... காசுகளை எல்லாம் எதிர் பார்க்காமல், பலர் வியக்கும் படி அனைவரின் முன் நின்று திருமணம் செய்து வைத்தும்...திருமணம் செய்து போன மகள் வீட்டிற்க்கு வரும் போது, எதையும் எதிர் பார்க்காமல்...தன் உடல் நிலை சரி இல்லை என்றாலும்..... நான் தான் என் பிள்ளையை பார்த்துக் கொள்வேன் என்று ஆசையாக, வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்த.... தன் அம்மா அப்பாவை.....இவள் நல்ல முறையில் கவனித்துக் கொள்வாளா?....  என் மகளுக்கு, என் மகளுக்கு  என்று பேசிய தாய் தந்தையை என் அம்மா வருகிறார்கள் என் அப்பா வருகிறார்கள் என்று விழி மேல் விழி வைத்து இவள் காத்துகொண்டு இருப்பாளா? .... அவர்கள் வருகையை தேடி?.... 

வரப்போகும் அவளுடைய அம்மா அப்பாவிடம்....இவள் மனதில் உள்ளதை கூராமல் நன்றாக கவனித்துக் கொள்வாளா?.......



என்ன தான் நடக்கு என்று பார்ப்போம்?.....

அடுத்த போஸ்ட்டில் நடந்ததை சொல்லுகிறேன்...


கண்ணீரோடு ஒரு பெண்ணின் மனம்..... :'(



                                 







Sunday, June 30, 2013

உண்மை கதைகளுக்கான வரவேற்ப்பு ....

என் போஸ்ட்களை படிக்கும் அனைவருக்கும் நன்றி .....

         சில நாட்களாகவே என் மனதில்..... உண்மையாக நடந்த கதைகள் என் (தோழிகள்,சகோதரிகள்,தெரிந்தவர்கள்) மனதை பாதித்த கதைகள், நான் கேட்டறிந்த கதைகள், எல்லாம் உங்களுடன் இதன் மூலம் பஹிர்ந்து கொள்ளலாம் என விரும்புகிறேன்.
       எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் சில நாட்களாக என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். என் கணவரும் வெகுநாட்களாகவே என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஏதேனும் சிறு கதைகள் எழுதலாமே என்று. எல்லோரும் சொன்னால் போதுமா மனதில் பட்டதையும், கேட்டறிந்த விஷயங்களையும், எல்லாம் சொல்லுவது எளிது அதை ஒரு கதையாக எழுதுவது சாத்தியமல்ல.

   அப்படி எழுத வேண்டும் என்றால் அதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன...
  1. முதலில்  கதை எழுதுபவர் கதையோடு இனைந்து இருக்க வேண்டும் .
  2. கதையில் வருவது எல்லாம் தனக்கு நடந்தது போல யோசித்து எழுத வேண்டும்.
  3. அடுத்தவர்களுக்கு புரியும் படி இருக்க வேண்டும்.
  4. நான் எழுதும் (எழுதப்போகும்) உண்மை கதைகள்  நீங்கள் எல்லாரும் படித்து விட்டு போவதற்காக எழுதுவது அல்ல.  உங்கள் வாழ்க்கையிலும் இது போன்ற தவறுகள் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவே நான் எழுதுகிறேன்.
  5. கதைகள் என்றுமே படித்து விட்டு போவதற்க்கு அல்ல......மாறாக நம் நடைமுறை வாழ்க்கையில் நமக்கு தெரியாத சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதற்கும், மாற்றி அமைப்பதற்கும் தான். 
  6. சில பல முடிவுகளை நாம் எடுப்பதற்க்கு கூட, நாம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் நாம் கேட்டறிந்த சில விஷயங்களை மனதில் கொண்டு தான் முடிவு எடுக்கின்றோம்.  இப்படித் தான்  பெரும்பாலான கதைகள் நமக்கு உதவுகின்றன.
  7. என் கதையும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைபடுகிறேன். படித்துவிட்டு மறந்து விடுவதற்கு அல்ல.
     

     என் மனதில் பட்ட சில விஷயங்களை எழுதி இருக்கிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் கேள்வியோ, தவறோ, சந்தேகமோ இருந்தால் தாரளமாக இதில் தெரிவிக்கலாம். 

     நான் கதை எழுத அரம்பித்தவுடன் அந்த பகுதியை உங்களுக்கு கண்டிப்பாக  இதில் பகிர்ந்து கொள்வேன்.


                                                               நன்றி .......


                                           

பேஸ்புக் காதலால் சீரழிந்த கல்லூரி மாணவி!

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார். உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார்.

அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார். சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார். பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்




                                          

Thursday, June 20, 2013

முதல் திருமண நாள்


இதுநாள் வரை உன் பாசத்தை இழந்தேன்....
இனி ஒரு நிமிடம் கூட உன் பாசத்தை இழக்க மாட்டேன்...
நான் சாகும் வரை .......

இந்த நாளை கொடுத்த அந்த ஆண்டவனுக்கு
முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....
அந்த கடவுள் உன்னையும் என்னையும்
ஒன்றாக இணைத்த நாள் ..........

நீ என் கழுத்தில் மாலையிட்டு ......
மாங்கல்ய தாலிகட்டி .....
எல்லோரும் நமக்கு அர்ச்சனை தூவி
ஆசிர்வாதம் வழங்கிய நாள்.....

உன்னில் நானும் என்னில் நீயும்
சரி பாதி என எனக்கு புரியவைத்த நாள்........
எனக்கு உனக்கும் இனி ஒரு குடும்பம் இல்லை
இரண்டு குடும்பம் என சொல்லிக் கொடுத்த நாள்.......
உடலால் மட்டும் அல்ல மனதாலும்
நாம் இருவர் சரி சமம் என தெரிந்து கொண்ட நாள் ......

நாம் இருவரும் முதல் முதலாக கை கோர்த்து
நடக்க ஆரம்பித்த நாள்.....
நான் சந்தோஷமாக இருந்த நாள்....
என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்.....
ஒவ்வொரு வருடமும் திருவிழா போல
நான் கொண்டாட நினைக்கும் அந்த ஒரு நாள்........
நம் புது வாழ்க்கையில் நான் அடியெடுத்து வைத்த நாள்....

இம்ம்ம் இன்று நம் (முதல்) திருமண நாள் ....


                                      
                                       


                                           *******************








Monday, June 17, 2013

வாழ்நாள் முழுவதும் வேண்டும்....

எங்கிருந்தாயடா நீ ............
உன் பாசத்தை இத்தனை நாட்கள் இழந்து விட்டேனடா 

கவலை என்றால் என் தாயை போல.....
உன் தோள்சாய்த்து அனைத்துக்  கொள்வாயடா நீ 
தவறு செய்தால் என் தந்தையை போல....
அதை திருத்தி செய்ய கற்றுத் தருவாயடா நீ
தெருக்களில் நடந்து செல்லும் போது என் சகோதரனை போல.....
எனக்கு துணையாக இருந்து என்னுடன் வருவாயடா நீ
ஒரு தோழனாக இருந்து எனக்கு....
தோள் கொடுத்தாயடா நீ
ஒரு காதலனை போல......
எனக்கு அணைப்பும் ஆறுதலும் தந்தா(தருவா)யடா நீ
ஒரு குழந்தையை போல....
என்னிடம் அழகாக மழலை மொழியில்
பேசியும் அடித்தும் விளையாடுவாயடா
என் செல்ல கண்ணா(புஜ்ஜு) .....
ஒரு கணவனாக இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ.....
அதெல்லாம் செய்தா(வா)யடா நீ .....

இப்போது மட்டும் அல்ல...
இதெல்லாம் என் வாழ்நாள் முழுவதும் வேண்டும்....
நான் இறக்கும் காலம் வரை உன் துணைவேண்டும் ......
அது போல நீ காட்டும் இந்த பாசமும் வேண்டும் ......
இது என்றும் மாறாமல் இருக்கும் என நம்புகிறேன்....

நம்பிக்கை தானே வாழ்க்கை ......  :)

                                                 
                                                 ******************

ஒரு முத்தத்திற்க்கு இத்தனை வகையா :-o

 ஒரு முத்தத்திற்க்கு இத்தனை வகையா  :-o

முத்தம் இதை அறியாதவர் இந்த உலகில் யாருமே இல்லை
குழந்தைகள் முதல் அறிந்து வைத்திருக்கும் ஒரு வார்த்தை .....

தாய் குழந்தையை அனைத்து கொடுக்கும் முத்தம் - அன்பின் வெளிப்பாடு

குழந்தையிடம் தாய் : (எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் கொடுப்பது)

உலகத்தில் விலை உயர்ந்த ஒன்று தான் குழந்தையின் முத்தம் ....

அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடும்மா செல்லம் என்று தாய் கேட்டவுடன்
குழந்தை தாயை அணைத்து கொடுக்கும் முத்தம்   - பாசத்தின் வெளிப்பாடு

ஒரு வித சின்ன எதிர் பார்ப்புடன் கொடுப்பது : (காதலன் ....காதலி)

காதலன் காதலி இருவரும் கொடுக்கும் முத்தம்     -காதலின் வெளிப்பாடு

கணவன் மானைவி இருவரும் கொடுக்கும் முத்தம் - அன்பு,பாசம்,காதல் இந்த முன்றின் வெளிப்பாடு

                               

Saturday, June 8, 2013

துன்பம் இன்பம் - நிரந்தரமில்லை

           
                       

         துன்பம் வரும்போது இதுவும் கடந்து போகும் என்று நினைக்கும் மனது ....
இன்பமாக இருக்கும் சமயத்தில் இதுவும் கடந்து போகும் என்று ஏன் நினைக்க மறுக்கிறது.... என்று தான் எனக்கு புரியவில்லை .........மொத்தத்தில் இன்பமும் சரி துன்பமும் சரி வாழ்க்கையில் என்றுமே நிரந்தரமில்லை ........

         இப்போதெல்லாம் துன்பம் வரும்போது இதுமட்டும் என்னை ஏன் துரத்துகிறது. நான் சந்தோஷமாக இருப்பது அந்த துன்பத்திற்கு புடிக்கவில்லையோ என்னவோ என்று என் மனதிற்கு தோன்றுகிறது......... இதில் என்ன சிரிப்பான விஷயம் என்றால்..........எனக்கு இன்பம் வரும்போதெல்லாம் சொல்லிவிட்டு வருகிறதோ இல்லையோ துன்பம் வரும்போது கட்டாயம் என்னிடம் நான் வரப்போகிறேன் என்று சொல்லிவிட்டு தான் வருகிறது.அதை நினைத்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது.
     
       ஆனால், அதை எதிர்த்து போராடும் சக்தி மட்டும் தான் எனக்கு இன்னும் கடவுள் தரவில்லை.
   
        துன்பம் வரும் செய்தியை முன்கூட்டியே எனக்கு தெரியபடுத்துபவர்க்கு  அதை சமாளிக்கும் திறமையும் அல்லது அதை எதிர்த்து போராடும் மனதைரியமும் இன்னும் எனக்கு அனுப்பிவைக்க மறுக்கிறாரே ஏன்?

             எனக்கு வரப்போகும் துன்பத்தை வெளியில் சொல்லிக்கொள்ள எனக்கு மனதைரியமும் இல்லை ....................

Sunday, May 26, 2013

சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் எனக்கு பிடித்த வரிகள் (Practical Life)


  •       நான் நினைச்ச மாதிரி மூர்த்தி இல்லடி ....... கேட்டா அவன் நினைச்ச மாதிரி நான் இல்லைன்னு சொல்லுறான். நாங்க இரண்டு பேரும் பிரிஞ்சி ரொம்ப நாள் ஆகுது.

  •     மஞ்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கலைனா எனக்கும் சின்ன வயசுல ஒரு புனிதமான காதல் இருந்துச்சுன்னு  சாகுற வரைக்கும் சொல்லிட்டு இருந்துருப்பேன்.  உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சுது, அப்படி சொல்லுறதுக்கு மட்டுமே அது சரி. 
  
  •        காலைல எழுந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குரவரைக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு அது சந்தோஷமா அமையலைன்னா அன்னைக்கு நைட் தூக்கம் வராது.  ஒருநாள் இரண்டு நாள் தூங்காம இருக்க முடியும் அது சகஜம் ஆனால் காலம் பூரா தூங்காம இருக்க முடியாது.   
  •     சின்ன வயசு காதலை தெய்வீகம் புனிதம்ன்னு சொன்ன அத்தனை பேரும், தன்னுடைய சின்ன வயசு காதலியை கல்யாணம் பண்ணிருக்க மாட்டாங்க.  முதல் முத்தமும் முதல் காதலும் மறக்க முடியாதுன்னு சொன்ன மார்க்சிங் கார்க்கியே .......... தன்னுடைய முதல் காதலியோடு வாழ முடியலை.  முதல் காதலை மறக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்களே தவிர.......வாழ முடியும்ன்னு யாரும் சொல்லலை.  

  •         "10வருஷமா காத்திருந்து கல்யாணம் பண்ணினவனை நானே எப்படி புடிக்கலைன்னு சொல்ல முடியும்".

  •         "முதல்நாள் சைக்கிள் ஒட்டினது, முதல்நாள் கல்லூரி போனது, முதல் நாள் ஸ்டேஜ்ல பேசினது இப்படி எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சி மாதிரிதான் முதல் காதலும்.  அதை மட்டுமே தகுதியா வச்சு நாம கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பு.  இனிமேலும் சேர்ந்திருந்தா நாம இரண்டு பேருல யாரவது ஒருத்தர் தான் உயிரோட இருப்போம்.  உனக்கும் வாழ்க்கை இருக்கு எனக்கும் வாழ்க்கை இருக்கு."

  •        கல்யாணம்கிறது one way மாதிரி போய்ட்டா திரும்பவே முடியாது அதனால போறதுக்கு முன்னாடியே நல்லா யோசிக்கனும்........யோசிக்கிறதுக்கு அறிவு வேணும்.

  •      உலகம் என்ன ஏதுன்னு தெரியாத வயசுல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. உலகம் புரிற வயசுல அவருக்கு என்னை புடிக்கலை ....... எனக்கு அவர புடிக்கலை . 

  • உண்மையான love ஒருத்தனுக்கு வந்ததுக்கு அப்புறம் ........... இந்த உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களும் அவனுக்கு அம்மாவும் தங்கச்சியும் மாதிரி நினைப்பான்.

                                                             

Tuesday, May 21, 2013

வாழ்க்கை


பொழுது போக்குக்காக காதலிக்காதீர்கள்
காதலுக்காக வாழ்க்கையை இழக்காதீர்கள்

இரண்டு வரிக்கும் இரு வேறு அர்த்தங்கள் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை இன்பமாகும்.
புரியாத வாழ்க்கை பிரிந்து போகும்.


Wednesday, May 15, 2013

காதல்

படிப்பு,அறிவு,தகுதி,பணம்,அழகு இதில் ஏதோ ஒன்றை அடிப்படியாக வைத்து வந்த காதல் என்றும் நிலைக்காது அது நிலையானதும் அல்ல. என்றாவது ஒருநாள் அது உன்னை விட்டு போய்விடும். பாசம் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து வந்த காதல் என்றுமே நிலையானது. அதற்க்கு அழிவே கிடையாது.

பாசத்தை வைத்து காதலித்து பார் அது தான் அழியாத காதல். காதலர்கள் இறந்தாலும் அவர்களது காதல் இறப்பதில்லை......

காதல் என்பது இளம் வயதில் வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதல் என்று அர்த்தம் இல்லை. அம்மா அப்பா இருவரும் குழந்தைகள் மீது வைப்பதும் காதல் தான். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருப்பதும் காதல் தான். எல்லா காதலும் பாசத்திற்கு மட்டுமே அடிபணியும்.

உன் அம்மா அப்பாவை காதல் செய்
உன் அண்ணன் தங்கை உறவை காதல் செய்
உன் நட்பை காதல் செய்
உன் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வாழுங்கள் உங்கள் வாழ்க்கை பூந்தோட்டமாக மலரும்......... :) 


தேடிக்கிடைப்பது காதல் இல்லை தானாய் வந்து அமைவது தான் காதல் :)

Love is sweet pain ..... :)



அழகு

பண்பான கணவனுக்கு உண்மையாக நடப்பது நல்ல மனைவிக்கு அழகு ......

பாசமான மனைவிக்கு பாசத்திற்க்கு இலக்கணமாய் விளங்குவது நல்ல கணவனுக்கு அழகு ..... :)


Saturday, April 13, 2013

உனக்காக காத்திருக்கிறேன்

                 
                             

                                 காத்திருப்பதும் ஒரு சுகம் தான்

அதிலும், உனக்காக காத்திருப்பதை விட பெரிய சுகம்
இந்த உலகில் வேறு ஏதும் இல்லை
என் வாழ்க்கையின் அர்த்தமே உன்னிடத்தில் இருந்து தானே ஆரம்பம்...

அந்த ஆரம்ப கட்டத்தில் இருந்து
நான் காத்துக்கொண்டு தான் இருக்கிறேன் உனக்காக...! 

நம் இருவருக்கும் திருமணம் என்று பேச தொடங்கிய நாட்களில் இருந்து
நானும் காத்துக்கொண்டு தான் இருந்தேன் உன்னை பார்க்க ....!
நீயும் வந்தாய் என்னைப் பார்க்க .....!  
 
எனக்குள் ஏதோ உன்னிடம் சொல்ல முடியாத அளவு ஆனந்தம்
ஆனால், உன்னிடம் என்னால் அதை சொல்ல முடிய வில்லை....
ஏனென்றால், உனக்காக நான் காத்திருப்பது உனக்கே தெரியாதே......!

உனக்கும் எனக்கும் நிச்சயம் செய்த நாளில் இருந்து நான் காத்திருந்தேன்
நீ அழைக்கும் தொலைபேசியின் ஒலியை கேட்க ......
எந்த தொலைபேசி ஒலித்தாலும், நான் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லுவது
நான் தான் எடுத்து பேசுவேன் என்று
அதை கேட்டு என் அம்மா அப்பா சிரிக்காத நாளில்லை......
இம்ம் உன் அழைப்பும் வரவே இல்லை......  :(

ஆனால்,
திருமணத்திற்க்கு முந்தைய நாள் காலையில்....
எப்போதும் போல தொலைபேசி அழைப்பு வந்தது ....
நீ தான் போன் செய்திருந்தாய்....!
உன்னிடம் நான் பேசியது மிக மிக குறைவு என்பதால்
நீ பேசியதை கூட நான் மச்சான் பேசுவதாக நினைத்து
அம்மாவிடம் கொடுக்க போனேன்.....!
நான் தான் கண்ணன் என்று உன் பெயரை சொன்னதும்
எனக்கே ஆச்சர்யம் என்னிடம் பேசுவது  நீ தான என்று.....!
என் அம்மா நான் பேசுகிறேன் என்று சொன்னதும்
நான் தரமாட்டேன் என்று சொல்லி தனியே வந்து பேசினேன்....!
நீயோ என்னிடம் தான் பேசனும் என்று சொன்னாய்....!
நான் நினைத்து கூட பார்காத அளவுக்கு
எனக்கு சந்தோஷ அதிரிச்சி காத்திருந்ததை
நாம் பேசிய அந்த உரையாடலின் போது தான் அறிந்து கொண்டேன்.....!

நான் உன்னிடம் பேசுவதற்காக இவ்வளவு நாள்  காத்திருந்ததால் என்னவோ கடவுள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தினார் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்..!

அதற்க்கு இடையில் என்றாவது ஒரு நாள் என்னை பார்க்க நீ வருவாய் என்று காத்துக்கொண்டு இருந்தேன்......!
அதனால் வீட்டில் யாரேனும் கதவில் உள்ள
மின்சார மணியை அழுத்தினாலும்  சரி,
கதவை தட்டினாலும் சரி நீதானோ என்று ஓடி வந்து
கதவருகில் இருக்கும் ஜன்னலின் திரையை விளக்கி பார்ப்பேன் .......
அதில் எனக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றம் மட்டுமே....!

ஏனோ தெரியவில்லை எதிர் பார்த்து கிடைக்கும் சந்தோஷத்தை விட
எதிர் பாராமல் கிடைக்கும் சந்தோஷம் ஏனோ எனக்கு அதிகமாய் பிடிக்கும்.....

அதனால் கூட நடக்காத இந்த (நீ வீட்டிற்க்கு வரும்) விஷயத்தை ஆர்வமாக நான் எதிர் பார்த்திருந்தேனோ என்னவோ....

திருமணதிற்கு 4 நாள் முன் மண்டபம் பார்க்க எல்லாரும் வந்த போது
நீயும் வருவாய் என நினைத்தேன் ஆனால் நீ வரவில்லை
அதிலும் மிஞ்சியது ஏமாற்றம் தான்
உனக்காக நான் காத்திருப்பதும் நன்றாகத் தான் இருந்தது.....

நம் திருமணத்திற்க்கு பிறகு ஒரு மாதம் இருந்து விட்டு
நீயோ வெளிநாடு சென்று விட்டாய்....! 
நானோ விசாவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
ஏனென்றால் அது கிடைத்தால் தானே உன்னைக் காண
நான் அங்கே வர முடியும்......!

நான் இங்கு வந்த நான்கு நாட்களில்
மறுபடியும், நீ வேறு ஒரு நாட்டிருக்கு
வேலை விஷயமாக செல்ல வேண்டும் என்று சென்று விட்டாய்.....
வர பதினைந்து நாட்கள் ஆகும் என்று நீ சொன்னாய்....
நானும் உன் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
நீயும் வந்தாய் ........

நான் நினைத்துக்கொண்டேன்
இதோடு, உனக்காக நான் காத்திருந்த காலம் எல்லாம் முடிந்தது என்று...!

உன்னை விட்டு நான் தனியாக இருந்த கால கட்டத்திலெல்லாம்
நான் நினைத்தது உன்னை...உன்னை...... உன்னையே மட்டும் தான்...! 

உனக்காக காத்திருந்தாலும் நான் உன்னையே நினைக்கும் பட்சத்தில்
நான் ரொம்பவே சந்தோஷமாக இருந்து வந்தேன்......!
நான் உன்னை பற்றி நினைப்பதில் ஒரு பங்காவது
என்னைப் பற்றி நீ நினைக்க மாட்டாயா என்று எண்ணி
எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேனடா.....!

உன்னை விட்டு இப்படி அடிக்கடி பிரிந்து...
நான் அவஸ்த்தைப்படுவதை பார்த்து....
அந்த கடவுள் சந்தோஷப்படுகிறாரோ என்னவோ.....
என்னுடன் இப்படி அடிக்கடி விளையாண்டு கொண்டே இருக்கிறார்...!
நான் உன் மீது அதிக அளவு பாசம் வைத்திருக்கிறேனா என்று சோதித்து பார்க்கிறாரா தெரியவில்லையே....!

என் கண் முன்னாடி அந்த கடவுள் வந்து நின்றால்....
நான் ஒன்று மட்டுமே அவரிடம் கேட்பேன்.....
உனக்கு நியாயமே இல்லையா?
ஏன் இப்படி என்னை அடிக்கடி தனிமையிலே தவிக்க வைக்கிறாய் என்று...!

(கடவுளிடம்) நீ தனிமையில் இருந்து பார்....
என் நிலைமை உனக்கு புரியும் என்று சொல்லுவேன்...!

ஆனால்,
அவர் இப்படி தவிக்கவிடவில்லை என்றால்....
நான் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று
எனக்கே தெரியாமல் போயிருக்கும்....!
அதுக்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிகிறேன்....!

ஆனால்,
போதும் இதுக்கு மேல இந்த மாதிரியான பிரிவு எல்லாம் வேண்டாம்.....
அதை தாங்கும் அளவுக்கு எனக்கு மனமில்லை....!

சரி, அதுதெல்லாம் போகட்டும் 
இது வரை நான் உனக்காக காத்திருந்த காலமெல்லாம் போதும்..... 
இனியும் என்னை இப்படி தனியே தவிக்க விட்டு செல்லாதே...............

சீக்கிரம் வந்துவிடு ........ உனக்காக நான் இங்கே காத்துக்கொண்டே இருக்கிறேன்...........!

                                                                                                                 இப்படிக்கு,
                                                                                                    உன் அன்பு மனைவி      



                                                 

Thursday, April 4, 2013

நாளை வேண்டாம் இன்று மட்டும் போதும்

நேற்று இருந்த இன்பம் இன்று இல்லை
இன்று இருந்த துன்பம் நாளை இல்லை

இதுவும் கடந்து போகும் - பகவத்கீதை

நாளை,நாளை என்று இந்த நாளை என்கிற வார்த்தை மட்டும் ஏன் தொடர்ந்து வருகிறது. எனக்கு புரியவே இல்லை. நாளை என்பதை மட்டும் மனிதன் நினைவில் வைத்தே வாழுகிறான். நாளை என்பதற்க்கு கொடுக்கும் மதிப்பில் பாதி  கூட இன்று என்பதற்கு செலவிட மனிதனுக்கு மனமில்லை.

நாளை பால்காரன் கடன் கொடுக்கணும், பேங்க்ல லோனுக்கு பணம் கெட்டனும், பிள்ளைங்களுக்கு பள்ளி (கல்லூரி ) படிப்புக்கு  பீஸ் கொடுக்கணும், வீட்டு வாடகை, சாப்பாடு செலவு, பண்டிகை செலவு, துணிமணி செலவு, சுற்றுலா செலவு, கல்யாணம் காட்சி செலவு இப்படி சொல்லணும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். மனிதன் சம்பாதிக்கும் பணத்தை கூட நாளைக்கு செலவுக்கு வேண்டும் இன்று பார்த்து செலவு செய்யணும் என்று யோசிக்கிறான்.

ஹ்ம்ம் இதை எல்லாம் யோசிச்சே சிலருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேருகிறான். இன்றைய தினத்தை மட்டும் நினைத்திருந்தால் இவ்ளோ மனக்கவலை வருமா?....

நாளைய தினத்தை பற்றி யோசிக்கவில்லை என்றால் அந்த பிரெச்சனையோ  அதுக்கடுத்து வருகிறது. இதற்க்கு என்னதான் தீர்வோ.

மொத்தத்தில் இன்று(நடந்து கொண்டிருக்கும் நாள்) என்று சொல்லிக்கொண்டு. நாளை பற்றிய எண்ணம் தான் நம் எல்லோர் மனத்திலும் இருக்கிறது. இன்னைக்கு இருக்கும் கோவம் நாளைக்கு போயிருமா, இன்னைக்கு இருக்கும் சந்தோஷம் நாளைக்கும் நிலைக்குமா, இன்று இருக்கும் பணம் நாளையும் இருக்குமா என்று கேட்டால் யாருக்கும் பதில் சொல்லுவது கொஞ்சம் கடினம் தான்.

பகவத்கீதையில் "இதும் கடந்து போகும்" என்று கிருஷ்ணர் சொன்னது துன்பம் மட்டும் என்று என்னால் எடுத்துகொள்ள முடியவில்லை, ஏன் இன்பமும் கடந்து போகும் என்று தானே இதற்க்கு அர்த்தம்.

நாளை என்று யோசிப்பதே பெரிய துன்பம் தான் அதை யோசிக்காமல் விட்டுவிட்டால் என்றும் இன்பம் தான் என நினைக்கிறேன் தெரியவில்லை. இன்றைய நாளை நல்முறையில் பார்த்து கொள்ளுவதும் நம்முடைய கடமை தானே.

நாளை வேண்டாம் இன்று மட்டும் போதும்.

நாளை இல்லை என்றால் இன்று இல்லை
இன்று இல்லை என்றால் நாளை இல்லை

என்ன வாழ்க்கைடா இது :(

நாளை....நாளை....நாளை.......வேண்டாம்......இன்று......இன்று.....இன்று...

யாரேனும் இதற்க்கு தீர்வு இருந்தால் கூறுங்களேன்.









Wednesday, March 27, 2013

ஐ லவ் யூ அப்பா



ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்
பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?

--படித்ததில் பிடித்தது

குழந்தையின் சிரிப்பு

குழந்தையின் சிரிப்பில் நஞ்சு இல்லை பரிசுத்தமானது 
அதுபோல தான் 
குழந்தையின் மனதும் 
தூய்மையானது, பரிசுத்தமானது யாருக்கும் எந்த கேடும் நினைப்பதில்லை 
குழந்தை சிரிப்பதால் யாருக்கும் கேடு இல்லை மாறாக 
குழந்தை சிரித்தால் நமக்கும் சந்தோஷம் தான் வரும் ....

இல்லறம் நல்லறமாக இருக்கும் ....... 

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் :)
 

Sunday, March 17, 2013

"மனிதன் தேடுகிறான்!"

                                       

மனம்
விசித்திரமானதுதான்
விலக விலகத்தான்
ஆசைப்படுகிறது..  

மரணத்தின் சுவாசத்திலும்
ஏனோ மயங்குகிறது
எதையோ கேட்கிறது
எதற்காகவோ ஆசைப்படுகிறது..

இறுதி யாத்திரையின்
முடிவான அசைவிலும்
அந்தக் கண்கள்
கனவைச் சுமக்கின்றனவே…

ஏன் தெரியுமா?
"மனிதன் தேடுகிறான்!"

இரை தேடும் இந்த  பறவையை போல!!!!

Manam
Visithiramaanadhu dhaan
Vilaga Vilagadhaan
Aasai padugiradhu...

Maranathin Suvasathilum
Yeno Mayanguhiradhu
Edhaiyo Ketkiradhu
Edharkkagavo Aasaipaduhiradhu .....

Irudhi Yathirain
Mudivaana Asaivilum
Andha Kangal
Kanavaich Sumakindranave....

Yen theriuma?
"Manidhan Theduhiraan!"

Irai thedum indha paravai pola!!!!

Wednesday, January 9, 2013

அன்பு

அன்பா பேசுறவங்க எல்லோர் மனசிலையும்

அன்பு இருக்காது ஆனால் உரிமையோட

சண்ட போட்டு கோப படுறவங்க மனசில

ஆழமான அன்பு அழியாம இருக்கும்..

Tuesday, January 8, 2013

காதலா, நட்பா?

காதலா, நட்பா?

ஷேக்ஸ்பியர்: ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது.
லிங்கன்: ஆண், பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி.
வோர்ட்ஸ் வொர்த்: நண்பர்களாக இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோ சொல்வது என்பது மறைமுகமாக உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்.
ஜாக்கி சான்: காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.
பிக்காசோ: ஒருவர் உங்களுடைய சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லது அவளோ எளிதில் உங்கள் வாழ்க்கைத் துணையாக வந்துவிடுவார்.

தனிமையின் வெறுமை

                                                      


எத்தனையோ உறவுகள்
என்னை சுற்றி. . !
எத்தனையோ இரவுகள்
யாரும் இன்றி. . !
ஏனோ நீ இல்லாதது மட்டும்
என்னையும் சேர்த்து
நான் உன்னிடம் தொலைந்ததை
உணர்த்துகிறது. . !
தனிமையின் வெறுமையை தவிப்பின்
வேண்டுதலை.

நீ என்னுடன்.......

நீ என்னுடன்.......

எப்போது நீ என்னுடன் இருந்தாய்
இப்போது என்னை விட்டு செல்வதற்கு?
பணம் தேட அயல் நாடு...
வீட்டில் இருக்கும்போது
நண்பர்கள், உறவினர்கள்,
தோட்டம், இயற்கை,
ஓவியம், புத்தகம்,
கண்காட்சி, என்று எத்தனை எத்தனையோ
காட்சிகளும் சம்பவங்களும் உனக்கு......
இதில்
என்னை நினைக்க உனக்கு ஏது நேரம்?
வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்,
வாழாமலே வாழ்ந்து கொண்டு......
கணவன் மனைவியாக.....
இதில் நல்ல ஜோடி பொருத்தம்
என்ற விருதுகளையும் வாங்கிக் கொண்டு.....