Thursday, June 20, 2013

முதல் திருமண நாள்


இதுநாள் வரை உன் பாசத்தை இழந்தேன்....
இனி ஒரு நிமிடம் கூட உன் பாசத்தை இழக்க மாட்டேன்...
நான் சாகும் வரை .......

இந்த நாளை கொடுத்த அந்த ஆண்டவனுக்கு
முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....
அந்த கடவுள் உன்னையும் என்னையும்
ஒன்றாக இணைத்த நாள் ..........

நீ என் கழுத்தில் மாலையிட்டு ......
மாங்கல்ய தாலிகட்டி .....
எல்லோரும் நமக்கு அர்ச்சனை தூவி
ஆசிர்வாதம் வழங்கிய நாள்.....

உன்னில் நானும் என்னில் நீயும்
சரி பாதி என எனக்கு புரியவைத்த நாள்........
எனக்கு உனக்கும் இனி ஒரு குடும்பம் இல்லை
இரண்டு குடும்பம் என சொல்லிக் கொடுத்த நாள்.......
உடலால் மட்டும் அல்ல மனதாலும்
நாம் இருவர் சரி சமம் என தெரிந்து கொண்ட நாள் ......

நாம் இருவரும் முதல் முதலாக கை கோர்த்து
நடக்க ஆரம்பித்த நாள்.....
நான் சந்தோஷமாக இருந்த நாள்....
என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்.....
ஒவ்வொரு வருடமும் திருவிழா போல
நான் கொண்டாட நினைக்கும் அந்த ஒரு நாள்........
நம் புது வாழ்க்கையில் நான் அடியெடுத்து வைத்த நாள்....

இம்ம்ம் இன்று நம் (முதல்) திருமண நாள் ....


                                      
                                       


                                           *******************








No comments:

Post a Comment