Tuesday, October 22, 2013

காதல் பிரச்சனை

ஆண்களுக்கு மட்டும் தான் காதலின் வலி தெரியுமா என்ன?
பெண்களுக்கு அதை விட தெரியும் .......

என்னமோ கவிதையாக எழுதி தள்ளுகிறார்கள் ...
எங்களுக்கு தான் காதலின் வலி அதிகம் ....
நாங்கள் தான் தனியாக தவிக்கிறோம் என்றெல்லாம் எழுதுகிறார்கள்...

ஒரு காதலன் எழுதும் கவிதையில் அதிகமாக பயன்படுத்தும் வரி....
நீ இல்லையென்றால் செத்து விடுவேன்......
தினமும் தவிக்கிறேன் அழுகிறேன் அன்பே .....
இறுதியாக, தினம் தினம் சாகிறேன் சீக்கிரம் வந்துவிடு.......
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே சொல்லிட்டு இருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை..

எல்லா பெண்களுக்குள்ளும் காதல் இருக்கிறது!
ஆண்கள் வைக்கும் பாசத்தின் அளவிற்கு பெண்களும் பாசம் வைகிறார்கள் ....
என்ன உங்களால் வெளிப்படையாக எழுத முடியும் ....
பெண்களால் எழுத முடியாது....

ஆண்களை பொறுத்தவரை வீட்டிற்கு தெரிந்தாலும் பிரச்சனை இல்லை...
கட்டிக்க போற பொண்ணுக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை இல்லை.....
காதலி பற்றி பெருமையான வார்த்தைகளும்,கவிதைகளும்
நடந்த கதைகளும்  மனைவியிடம் சொல்லுவார்கள் ......
மனைவியால் தான் எதுவும் சொல்ல முடியாதே....
(சந்தேக கேள்வி எழும்....அப்பெண்ணின் செயல்களை பொருத்து (தொடர்பில் இருந்தால்) )
மனைவி மனதில்படும் வேதனை பற்றி கணவனுகென்ன கவலை...
ஆண்களின் காதல் உலகத்துக்கே தெரிஞ்சாலும் பிரச்சனையே இல்லை....( ஒரு(இரு)தலை காதல் )
மொத்தத்தில் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை ................. (full open type)


பாவம் பெண்கள்....எத்தனை இடங்களில் தங்கள் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் .......
1. வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை....
2. கணவன் வீட்டிற்கு தெரிஞ்சால் பிரச்சனை.... (பழைய,பள்ளி,கல்லூரி காதல்)
3.கணவனுக்கு தெரிஞ்சால் பிரச்சனை...... (சந்தேக கேள்வி எழும்...தொடர்பில் இல்லை என்றாலும்)
4. மொத்தத்தில் வாழ்க்கையே சீரழிந்து விடும்..............

மொத்தத்தில் ஆண்களால் மன பாரத்தை கவிதை,கதையின் மூலம் வெளியில் கொட்டி விட முடியும்.....
பெண்கள் மனதினுள் போட்டு புதைத்து வைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் அவதிபடுவார்கள் ....
மண்ணிற்குள் புதையும் போது தான் அவள் கவலையும் சேர்ந்தே புதையும் .... :(

இதில் சில ஆண்கள் வித்தியாசம் மனைவியின் பழைய காதல் வாழ்க்கை பற்றி தெரிந்திருந்தாலும் அது எப்படி இருந்தால் என்ன?.. என் மனைவி பற்றி எனக்கு தெரியும்,என்று அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு கேள்வியும்  மனைவியிடம் கேட்பது இல்லை.... யாரேனும் அது சம்பந்தமா கேள்விகள் கேட்டால் கூட உங்க வேலைய நீங்க பார்த்துட்டு போங்க.  என் பொண்டாட்டி பற்றி எனக்கு தெரியும், என்று சொல்லும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......... அப்படிபட்ட ஆண்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.


"எல்லாவற்றிற்கும் மேலாக உலகில் மிகச் சிறந்த காதல் கணவன் மனைவி காதலே". 


நேற்று ஒரு படம் பார்த்தேன் சில கேள்விகள் மனதில் தோன்றியது எழுத வேண்டும் என்று நினைத்தேன் .............. என் மனதில் தோன்றிய குப்பைகளை கொட்டிவிட்டேன் நண்பர்களே.  :)

                                       
                                              

No comments:

Post a Comment