Thursday, December 13, 2012

படித்தால் மட்டும் போதாது சொல்லில் காட்டுவதை விட செயலில் காட்டுங்கள்



தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு  -  திருக்குறள் 
                                    
                                    இப்படி தினம் ஒரு திருக்குறள் படித்தால் மட்டும் போதாது .. அடுத்தவர்களுக்கு அறிவுரை சொன்னாலும் போதாது,  அதில் நாம் என்ன லட்சணத்தில் இருக்கிறோம், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூற, நாம் முதலில் இதை கடை பிடிகிறோமா, இதை பற்றி பேசுவதற்கு என எல்லா விஷயங்களிலும் சிந்தித்து பார்த்து பேச வேண்டும் . நமக்கு தான் பேச தெரியும் என இஷ்டத்திற்கு பேசுபவர்கள் . திருக்குறள் வரிகளை பின் பற்றுபவர்களாக இருக்க மாட்டார்கள் . எனவே, திருக்குறளை பின்பற்றுபவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு, அதை பின் பற்றுவதில்  நாம் சிறந்தவர்களாக இருக்கிறோமா என்று முதலில் யோசித்து பார்த்து , பின்பு  அறிவுரை சொல்ல வேண்டும். என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ..... இதை ஏன் கூறுகிறேன் என்றால், சிலர் திருக்குறளின்  வார்த்தைகளை இனிமையாக பேசுவார்கள். அதை பற்றி நாம் ஆச்சர்யம் படும் அளவுக்கு பேசுவார்கள்  ஆனால், அதை கொஞ்சம் கூட செயலில் காட்ட மாட்டார்கள். எனவே , இனிமேல் ஆவது இதே தவறை செய்யாமல் திருந்துங்கள் என கூறுகிறேன். அப்படி இல்லை என்றால் திருக்குறளை பற்றி யாரிடமும் உங்கள் பெருமையை  காட்டாதீர்கள். நீங்கள் பேசும்போது அதை கேட்கிறவர்கள் உங்களை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்தால், உங்களையே திருப்பி அந்த கேள்விக்கு பதில் கேட்டால் அவமானப்பட்டு நிற்காதீர்கள். திருந்துங்கள் இல்லையேல் இனியாவது திருத்தி கொள்ளுங்கள் .....

No comments:

Post a Comment