தீர்வு
தீர்வு என்பது ஒரு சில தேவைக்காக நாம் தேடும் முடிவாக இருக்கலாம்.... அதை , முடிவு என்றும் எளிதாக சொல்லி முடித்து விட முடியாது...... எதற்கும், என்றும் முடிவு என்பது இந்த உலகில் கிடையாது..... இந்த உலகிற்கும் , நமக்கும் உள்ள உறவு முடியும் வரை ஏதாவது ஒரு தேடல் ,தேவை இருக்கும் , அதற்கான முடிவு என்றும் நம்மை சுற்றி , சுற்றி வந்து கொண்டே தான் இருக்கும் .... ஆனால் அது கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிது அல்ல ... அது நம்மை சார்ந்தவர்களிடம் தான் அதிகம் இருக்கும் .... அப்படி இருப்பதால் ,அது அதை விட பெரிய கொடுமை ஏதும் இல்லை .... அவர்களிடம் அதற்க்கான தீர்வை நாம் கேட்பதற்கு , கேட்காமலே இருந்து விடலாமோ என்று கூட சில சமயங்களில் தோன்றுவது உண்டு .... அவர்கள் முடிவில் அவர்கள் தெளிவாக இருந்தால் நமக்கு முடிவு கிடைப்பது மிகவும் கடினம் ... ஏன் என்றால் ! அதை சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைத்து சொன்னால், அப்படியும் புரியவில்லை என்று தெரிந்தால் ....நாம் அவர்களுக்கு எவ்வளவு புரிய வைத்தாலும் புரிந்தும் புரியாதது போல நம்மிடம் பேசினால் ....அவர்களுக்கு அதில் வேறு ஒரு எண்ணமும் (கருத்தும்), வேறு முடிவும் மனதில் எண்ணி இருந்தால் ...நாம் தேடிய அந்த முடிவு எளிதாக கிடைப்பது என்பது சாத்தியம் இல்லை ....சரி , சொன்னால் என்னதான் நடக்கிறது பார்போம் என்று சொன்னால்.... அதற்க்கு தேவையான பாதி தீர்வு கிடைத்தால் கூட மகிழ்ச்சி தான் ....ஆனால் நாம் எதிர் பார்த்ததற்க்கு எதிராக இருந்தால் நாம் தேடும் அந்த தேடல் பாதிலே நின்று விடும்... நமக்கே அதன் மேல் ஒரு வித வெறுப்பும் வந்துவிடும் ... அதற்க்கு மேல் சொல்வதை விட்டு விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டியது தான் ....இது என்றும் முடிந்து விடாது .....மறுபடியும் ஒரு நாள் அது நம்மை தேடிவரும் .... அது வரை காத்திருக்க வேண்டும் ...அப்போதும் முடிவு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் .................... அதனால் அதை சார்ந்தவர்களிடம் மனம் விட்டு பேசினால் முடிவு கிடைக்கலாம்... மனம் விட்டு பேசினால் எந்த ஒரு தேவைக்கும் முடிவு கிடைக்கும்.......
........****..........~~~~````............****.......
........****..........~~~~````............****.......

No comments:
Post a Comment